கந்தர்வகோட்டை, டிச.12: கந்தர்வகோட்டையில் உரிய அனுமதி பெறாமல் பர்னிச்சர் குலுக்கல் சீட்டு நடத்திய இருவர் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்தனர். கந்தர்வகோட்டையில் செங்கிபட்டி சாலையில் பாலாஜி சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் வாரம் வாரம் பணம் பொதுமக்களிடம் வசூல் செய்து மாதத்தில் ஒரு நாள் குலுக்கல் முறையில் பயனாளிகளை தேர்ந்தெடுத்து பொருட்களை வழங்கி வந்துள்ளனர். அதே போல் நேற்று முன்தினம் தனியார் திருமண மகாலில் பர்னிச்சர் குலுக்கல் நடைபெற்றுள்ளது. இதற்கு முறையான அரசு அனுமதி பெறாத காரணத்தினால் கந்தர்வகோட்டை விஏஓ வீரபாண்டியன் புகாரின்பேரில் கந்தர்வகோட்டை போலீசார் பாலாஜி சிட்பண்ட் உரிமையாளர் புனல்குளத்தை சேர்ந்த விஜயகுமார்(39) மீதும், அவருக்கு உதவியாக இருந்த கந்தர்வகோட்டையை சேர்ந்த ரமேஷ்(28) ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்க்கொண்டு வருகின்றனர்.